நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக நினைத்தது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது..
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா. குறிப்பாக அவர் நடித்த ’96’, ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பின், பல்வேறு மொழி படங்களில் பிசி நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது கைவசம் அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முக்கிய ஸ்டார்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி கொடிகட்டி பறக்கும் த்ரிஷா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருந்தாராம். அப்போது அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை.
இதனால், சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்று நினைத்துள்ளார். அப்போதுதான் ‘சாமி’ படம் அவருக்கு வந்துள்ளது. கடைசியாக இந்த படத்தில் நடிப்போம். ஓடினால் இருப்போம், இல்லையென்றால் சினிமாவிற்கு டாட்டா சொல்லலாம் என்று இருந்துள்ளார்.
ஆனால், ‘சாமி’ படம் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் அடித்ததால், அதன்பின் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.