யாழில் நடந்த துயரம்! குழந்தை உட்பட 2 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம்-இணுவில் பகுதியிலேயே குறித்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 3 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், முதற்கட்ட தகவலின் படிய உயிரிழந்தவர்களில் ஒருவர் இணுவில் பகுதியை சேர்ந்த சயந்தன்(32), அவரது 6 மாத குழந்தை அப்சரா என்பது தெரியவந்துள்ளது.

ரயில்வே காப்பாளர் இல்லாததே, இந்த விபத்திற்கு காரணம் என் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!