போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய வர்த்தகர்..

தற்போது நடைமுறையில் உள்ள யுக்திய நடவடிக்கையின் கீழ், மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹெரோயின் போதைப் பொருள் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது 22 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய “கதிரானவத்தே கோனா” என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!