குரோதி வருடம் சித்திரை மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.05.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள்.
புதிய தொழிலில் அதிகமாக பண முதலீடு செய்யாதீர்கள்.
பங்குப் பரிவர்த்தனை வியாபாரத்தில் எச்சரிக்கையாக ஈடுபட மறக்காதீர்கள்.
ரிஷபம்
கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள்.
கணினித் துறைஇ கட்டுமானத் தொழில்இ கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள்.
மிதுனம்
எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள்.
காதலித்த பெண்ணால் புதிய சிக்கலை சந்திப்பீர்கள்.
அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள்.
கடகம்
பைனான்ஸ் தொழிலில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.
கடன் கொடுத்தால் எழுதி வாங்கிக் கொள்ள தயங்காதீர்கள்.
அடுத்தவருக்காக நீதிமன்ற ஜாமீன் கொடுக்காதீர்கள்.
சிம்மம்
விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள்.
நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன் பெறுவீர்கள்.
கண்ணியமாக பேசி காதலை வெளிப்படுத்துவீர்கள்.
கன்னி
வெளியூர் பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள்.
வியாபார விருத்திக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.
முதுகு தண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள்.
துலாம்
குடும்பப் பெண்களின் குழப்பத்தை தீர்ப்பீர்கள்.
மனைவியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவரை சந்திப்பீர்கள்.
இடம் விற்பனையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள்.
விருச்சிகம்
எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை சந்திப்பீர்கள்.
உத்தியோகத்தில் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள்.
இடம் வாங்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள்.
தனுசு
எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் பெறுவீர்கள்.
நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள்.
ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீர்கள்.
குடும்பத்தில் உங்கள் மதிப்பைக் கூட்டுவீர்கள்.
மகரம்
ஓய்வு இல்லாத வேலையால் நேரத்துக்கு சாப்பிடாமல் வயிற்று கோளாறால் அவதிப்படுவீர்கள்.
அரசாங்க வேலையில் ஏற்பட்ட பிரச்சனையை சாதுரியமாக சமாளிப்பீர்கள்.
தான் என்ற ஆணவத்தோடு பேசாதீர்கள்.
கும்பம்
வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டைப் பெறுவீர்கள்.
மீனம்
மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் அரசு வேலையில் சேருவீர்கள்.
தொழிலில் முன்னேற்றமடைந்து லாபத்தை பெருக்குவீர்கள்.
வாக்கு திறமையால் சுற்று வட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)