கமல்ஹாசன் எழுப்பிய கேள்வியில் அனைவரும் அலண்டுபோய்டங்க! அப்படி என்ன சார் கேட்டிங்க?

இந்திய தொலைகாட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டி புறப்பட்டுச் சென்றாலும் பகை மட்டும் ஏன் கொட்டிக் கிடக்கின்றது என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளமை மக்களை சிந்திக்கவைத்துள்ளது.

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது.

பணப்பெட்டி வெளியே சென்றாலும் பிக் பாஸ் வீட்டில் பகை மட்டும் ஏன் கொட்டிக் கிடக்குது என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!