ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஹெரோயினுடன் கைது!!

16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது.

 

நேற்றையதினம் இரவு, வவுனியா பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வவுனியா பொலிஸாரால் குறித்த தேடுதல் வேட்டை இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக அமைந்துள்ள டயர் திருத்தக வியாபார நிலையத்தில் மிக சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது என பொலிிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் அவர்களது வீடுகளும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!