மியான்மரில் கார்கள் நசுங்கிய விபத்தில் 3 பேர் பலி

மியான்மரில் சாலை விபத்தில் 5 வாகனங்கள் மோதிக்கொண்டதில் மூன்று பேர் பலியாகினர்.

யாங்கூன் – மண்டலே நெடுஞ்சாலையில் காலை வேளையிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

அப்போது சில கார்கள் வேகத்தைக் குறைக்க பிரேக் போட்டதால், பின்னால் வந்த எக்ஸ்பிரஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதனால் இரண்டு பாரிய வாகனங்களுக்கு இடையில் மூன்று கார்கள் சிக்கி நொறுங்கின.

இதில் மூன்று பேர் உயிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பலியானவர்களில் இருவர் ஆண்கள் என்றும், ஒருவர் பெண் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மீட்பு அமைப்பின் அதிகாரி சின்ஹுவா கூறுகையில்,

”இந்த விபத்து இரண்டு எக்ஸ்பிரஸ் கார்களுக்கு இடையில் சிக்கிய மூன்று சிறிய வாகனங்களை பாதித்தது. காயமடைந்தவர்களில் 8 வயது குழந்தை ஒன்றும் அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் Taungoo பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் அனைவரும் மூன்று சிறிய வாகனங்களைச் சேர்ந்தவர்கள்” என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!