நடிகர் யஷுக்கு கட்அவுட் வைத்தபோது ரசிகர்கள் மரணம்!

கர்நாடகாவில் பிரபல நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் யஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனால் அவரது ரசிகர்கள் கர்நாடகாவில் கட்அவுட் வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடக் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர், யஷிற்கு 25 அடி உயர கட்அவுட் வைத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்களை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ஹன்மந்த், முரளி நடவினமணி மற்றும் நவீன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

யஷ் பிறந்தநாளில் அவருக்காக கட்அவுட் வைக்கும்போது ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!