கொழும்பு துறைமுகத்திற்கு ஒரே நாளில் மூன்று பயணக் கப்பல்கள் வருகை..

கொழும்பு துறைமுகத்திற்கு வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் ஆளு செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட 4,000 பயணிகளுடன் இந்த மூன்று கப்பல்களும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

கொழும்பு துறைமுனத்திற்கு வருகை தந்திருக்கும் குறித்த கப்பல் பயணிகளை இறக்குவதற்காக கொழும்புக்கு மூன்று விமானங்களை கொண்டு வந்தது.

வாஸ்கோடகாமா கப்பலானது முதல்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அதன் பயணிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் அதற்கு முன் கொழும்பின் துடிப்பான இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், மின்னேரியா, தம்புள்ளை, சீகிரியா, பொலன்னறுவை கிழக்குக் கடற்கரையின் மயக்கும் காட்சிகள் போன்றவற்றை சுற்றலா பயணிகள் ஆராய்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நேரத்தில் மூன்று பயணக் கப்பல்களை ஏற்பாடு செய்யும் தடையற்ற செயற்பாடு, பெரிய குழுக்களின் பல்வேறு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் Aitken Spence Travels இன் விதிவிலக்கான திறனுக்கு ஒரு சான்றாகும்.

இவர்கள் இலங்கையில் உதிர்வரும் 17ஆம் திகதி வரை தங்கியிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!