விசேட பொதுமன்னிப்பில் ஆயிரகணக்கான கைதிகள் விடுதலை..

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் இன்று விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்நிலையில் 15 பெண்கள் ஜனாதிபதியினால் விசேட பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி. செனரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியமையினால் சிறையில் உள்ள கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!