இம்முறை பிக்பாஸ் பெட்டிக்குள் சடாரென அதிகரித்த பண பெறுமதி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்த பணப்பெட்டி உள்ளே வந்துள்ளது.

இந்திய பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது குறித்த நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வந்துள்ளது. எந்த போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது.

தற்போது பணப்பெட்டியில் உள்ள தொகையை பிக்பாஸ் சடார் என உயர்த்தியுள்ளார். இதனால் போட்டியாளர்களிடையே ஒரு தடுமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!