இந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்போதும் பணம் சார்ந்த பிரச்சனை இருக்கும்!

ஒருவர் பிறந்த ராசியும், அதன் கிரக நிலைகளும் அவரது நிதி நிலையை நிர்ணயிக்கும்.

அதேபோல் சில ராசிக்காரர்களுக்கு பணம் சார்ந்த பிரச்சனைகள் அவர்களின் முடிவுகளால் ஏற்படும்.

மேஷம்

இந்த ராசிக்காரர்கள் என்னதான் தைரியமான நபர்களாக இருந்தாலும், இவர்களின் மனக்கிளர்ச்சி நிதி முடிவுகளுக்கு வழி வகுக்கும்.

இவர்கள் தீர ஆலோசிக்காமல், ஒரு நம்பிக்கைகுரிய முயற்சியில் மனக்கிளர்ச்சியுடன் முதலீடு செய்வார்கள்.

இவர்களின் ஆக்ரோஷமானத் தன்மை சில சமயங்களில் பண விடயத்தில் பலவீனமாக்கும். இதனால் எதிர்பாராத நிதி சிக்கல்கள் உண்டாகும்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்கள் எப்போதும் வாழ்க்கையில் சிறந்த விடயங்களைப் பெற வேண்டும் என விரும்புவதால், சில நேரங்களில் அதீத செலவுகளுக்கு வழி வகுக்கும்.

மேலும், ஆடம்பர பொருட்களின் கவர்ச்சிக்கு இவர்கள் மயங்குவதால், அதற்காக கடனை வாங்கி குவிப்பார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் உணர்ச்சி தீவிரம் மிக்கவர்கள். இதனாலேயே இவர்களின் நிதி முடிவுகள் பாதிக்கப்படலாம்.

இவர்கள் நிதி ரீதியான பாதுகாப்பை பற்றி சிந்திக்காமல், உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே முதலீடு செய்வார்கள்.

இதனால் பணம் சார்ந்த சிக்கல்களை சந்திப்பார்கள். எனவே மனம் மற்றும் சிந்தனைக்கு இடையில் இவர்கள் சமநிலையை கடைபிடித்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்குவதற்காக சில நேரங்களில் ஆடம்பரமான செலவினங்களை செய்வார்கள்.

இவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாகவும் அவர்களை அறியாமலேயே நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள்.

துலாம்

இந்த ராசிக்காரர்களின் உறுதியற்ற தன்மை நிதி விடயங்களில் சவால்களை ஏற்படுத்தும்.

இவர்கள் சரியான நேரத்தில் முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியாமல், சில சமயங்களில் லாபகரமான வாய்ப்புகளை இழப்பார்கள்.

(இந்த தகவல்கள் அனைத்தும் அனுமானங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024