திட்டங்களுக்கு காசு இல்லை ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள்: சீமான் கேள்வி!

திட்டங்களுக்கு காசு இல்லை என்பவர்கள் ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

நாட்டு மக்களின் நலனை காக்க நாம் தமிழர் கட்சி போராடுகிறது. பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த அனைவருக்கும் உடனடியாக சின்னம் ஒதுக்கப்பட்டது.

சீமானுக்கு கிடைக்க இருக்கும் ஓட்டுகளை தடுக்க முயற்சி நடந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, காசு வாங்கி ஓட்டு போடுபவன் தேச விரோதி. நாங்கள் ஓட்டை விலை கொடுத்து வாங்கவில்லை.

மக்களிடமிருந்து பெற்றோம். திட்டங்களுக்கு காசு இல்லை என்பவர்கள் ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள். குற்றவாளிகளை உருவாக்கும் சமூகமாக இந்த சமூகம் உள்ளது.

நாங்கள் ஓட்டு கேட்டு நிற்கவில்லை. வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேட்டு நிற்கிறோம். மற்ற கட்சியினர் விலை கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். நல்ல எண்ணங்களை விதைத்து நாங்கள் ஓட்டு பெறுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:

அண்ணாமலை தமிழ் பற்று இல்லாதவர். கர்நாடகாவில் பணியாற்றும் போது பெருமை மிகு கன்னடர் என பேசியவர் அண்ணாமலை. அவருக்கு ஹிந்தி, உருது என பன்மொழி தெரிகிறது.

எனக்கு தமிழ் தவிர வேற ஏதும் தெரியவில்லை. தாய்மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். ஒவ்வொரு மொழி பேசுபவர்களை கண்டதும் அதே மொழியில் பேசுவது தான் மொழிபற்றா?. பதவிக்கா யாராவது தமிழர் இல்லை என்று பேசுவார்களா?. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!