முல்லைத்தீவில் தமிழீழ வரைபடத்தை பறக்க விட்ட இளைஞன்

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடத்தை பட்டமாக பறக்க விட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத் திருவிழா மேற்கொள்பவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01.2024) பட்டத்திருவிழா ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.

அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். இதை பார்ப்பதற்கும் ஏராளமான மக்கள் வருகைத்தந்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த பட்டத் திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம், கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.

இதனை அவதானித்தாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!