கொல்கத்தா மைதானத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர்!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான கேலரி ஒன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில், மிகவும் பிரபலமான ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.

இதில் உள்ள கேலரி ஒன்றில் நேற்று தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்த ஆணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.

விசாரணையில்இ இறந்த இளைஞர் மைதானப் பராமரிப்பாளர் ஒருவரின் மகன் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

21 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் பெயர் தனஞ்செய் பாரிக் என்பதாகும்.

இவர் மன அழுத்தத்தினால் இந்த முடிவிற்கு வந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இவரை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தனர்.

சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தற்கொலை தானா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்ற ரீதியில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!