உயிருக்கு போராடிய மாணவியை காப்பாற்ற முயன்ற பெண்ணும் பலி!

தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த பெண்ணும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி மேனகா.

இவர் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவருடன் கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி ஆகியோரும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவி மேனகா நீரில் குளிக்கும்போது மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த கனிச்செல்வி, கலைச்செல்வி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் மேனகாவை காப்பாற்ற இருவரும் கண்மாயில் குதித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாணவியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அத்துடன் கலைச்செல்வியும் அவருடன் சேர்ந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் கனிச்செல்வியை மட்டும் தான் உயிர் பிழைத்தார். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,உயிரிழந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியை காப்பாற்றும் முயற்சியில் பெண்ணொருவர் அவருடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!