கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை!

தமிழக மாவட்டம் திருச்சியில் கணவர் விபத்தில் இறந்ததால், மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அயித்தாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி சிலம்பரசன் (34) – கலா (27).

இவர்களது 8 மாத குழந்தை உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டது. இதனால் இந்த தம்பதி சோகத்தில் இருந்துள்ளது.

இந்த நிலையில் குபேந்திரன் என்ற நண்பருடன் சிலம்பரசன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அவர்கள் பயணித்தவாகனம் முசிறி-துறையூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதியுள்ளது.

இதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். குபேந்திரன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், கணவரின் உடலைப் பார்த்து மனைவி கலா கதறி அழுதுள்ளார்.

உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில் துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, கலாவை சடலமாக கிணற்றில் இருந்து மீட்டனர்.

கணவர் விபத்தில் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!