இந்தியாவில் இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இந்த புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 52 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மத்திய பிரதேசத்தில் 47 புலிகளும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 26 புலிகளும் உயிரிழந்துள்ளதுடன் தமிழ்நாட்டில் 15 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.