மகனை காப்பாற்றிவிட்டு தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரங்குளிய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வர்ணகுலசூரிய ஜனதா திசேரா(49). இவர் நேற்று 9ம் வகுப்பு படிக்கும் தனது மகனை, சிலாபம் பள்லியில் விடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது, பள்ளி அருகே உள்ள சாலையை கடக்குவதற்காக தனது மகனுன் நின்றுள்ளார். அந்த நேரத்தில் வேகன்ஆர் ரக கார் ஒன்று அதிவேகமாக அவரை நோக்கி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது மகனை அருகில் தள்ளிவிட்டு, தானும் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், கார் அவர் மீது பயங்கரமாக மோதியதில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததால், பெரிய அளவில் காயம் இல்லை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கார் டிரைவர் தூங்கியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரங்குளிய பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!