புதிய ஆண்டில் புதிய விமான சேவை ஆரம்பம்

ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் “ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட புதிய விமானசேவைக்கு போயிங்-777 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்காவிற்கும் இடையே வாரத்தில் 4 நாட்கள் ஒரு குறிப்பிட்ட அட்டவணையின்படி விமானசேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கான வெளிநாட்டு விமானச் செயற்பாட்டுச் சான்றிதழை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பி.ஏ.ஜெயகாந்த , கட்டுநாயக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில், ரோசியா விமான நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளின் தலைவர் நிகிதா டோல்கோவ் இடம் 12/29 அன்று வழங்கினார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!