ஜாம்பவான் ஜெயசூரியாவின் இமாலய சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!

இலங்கையின் பதும் நிசங்கா ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை 381 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் பதும் நிசங்கா 210 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 88 ரன்களும் விளாசினர்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 339 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஓமர்சாய் 149 ரன்களும், முகமது நபி 136 ரன்களும் விளாசினர்.

இப்போட்டியில் நிசங்கா 210 ரன்கள் விளாசியதன் மூலம், இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவின் 24 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

அதாவது ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ஸ்கோர் எடுத்தவர் நிசங்கா தான்.

2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக ஜெயசூரியா 189 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.

அதனை தற்போது தகர்த்துள்ள நிசங்கா, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!