நிலவின் அளவு குறைந்துவிட்டதாம்!

பல ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர்.

இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியுடன் ஒப்பிடும் போது, நிலாவில் குளிர்ச்சி கடுமையாக காணப்படும்.

இந்நிலையில் அதன் சுற்றளவு மெதுவாக குறைந்து கொண்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் நிலாவின் சுற்றளவு மேலும் குறையும் எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

நிலாவிலும் நிலநடுக்கம் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலாவில் ஏற்படக்கூடிய நிலநடுக்கம் பூமியை போல் சாதாரணமாக இருக்காது எனவும் அவை சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தகவல்கள் மூலமாக பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய நிலா பயணங்களை, மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலாவின் சுற்றளவு குறைவதால் பூமிக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ள விண்வெளி ஆய்வாளர்கள், பூமியிலிருந்து விண் வெளிப்பயணம் மேற்கொள்ளும் நாடுகள் இந்த தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!