வடக்கு ரயில் சேவை நிறுத்தம்!!!

வடக்கு ரயில் பாதை திருத்தத்தின் இரண்டாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே ஐனவரி 7ம் திகதி முதல், வடக்கு ரயில் மார்க்கம் மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையுள்ள பகுதி ஆறு மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி ஆணையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில், கொழும்பில் இருந்து மஹவ வரையும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரையும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!