சொந்த சகோதரனின் சின்ன மகளை துஷ்பிரயோகப்படுத்தியவருக்கு அதிரடி சிறைத்தண்டனை

தனது சகோதரனின் 10 வயதுடைய மகளை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றவாளிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதனை செலுத்த தவறினால் குற்றவாளிக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு கண்டி – மஹாமுல்கம பகுதியில், குறித்த 10 வயதுடைய சிறுமியை அவர் பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், 37 வயதுடைய குறித்த சந்தேகநபருக்கு எதிராக 3 வழக்குகளின் கீழ் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!