நத்தார் விருந்தில் பறிபோன உயிர்….

வெலிக்கடை, வல்பொல, விஜித புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நத்தார் விருந்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நத்தார் விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அங்கொடையைச் சேர்ந்த (62) என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!