முரண்பாட்டின் உச்ச கட்டத்தில் வீட்டை எறித்த கணவன்..

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறிய காரணத்தினால் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!