மறைந்த கெப்டன் விஜயகாந்துக்கு கிடைத்துள்ள உயரிய விருது

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்மவிபூஷண் விருதும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷண் விருதும், நடன கலைஞர் வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷண் விருதும், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்படுகின்றன.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!