தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர், “நாட்டில் நடைபெற்ற யுத்தம் முடிந்த பின் இலங்கை அரசு தமிழீழ வைப்பகத்தில் இருந்து தங்கங்களை கைப்பற்றி கொண்டு வந்தது.
எங்கள் இனத்திற்கு எதிராக இலங்கை அரசு, பெரிய இன அழிப்பை மேற்கொண்டது. இதனால், இதற்கு எதிராக எங்கள் தேசிய தலைவர் பிரபாகரன் ஆயுத போராட்டத்தை மேற்கொண்டார்.
20 வருடங்களாக அவர் வடக்கு-கிழக்கில் ஒரு நடைமுறை அரசாங்கத்தை நிறுவயிருந்தார். நாங்களும் யுத்தம் செய்தோம், நீங்களும் யுத்தம் செய்தீர்கள். ஆனால், நீங்கள் பொருளாதாரா ரீதியாக அதாள பாதாளத்தில் விழுந்துவிட்டீர்கள்” என்றார்.