வாடகைத்தாய் முறைக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

இந்தியாவில் தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் முறைக்கு அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வாடகைத்தாய் முறை கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் கணவன் – மனைவி இருவரில் யாருக்காவது குழந்தை பெற முடியாத பிரச்சனை இருந்தால், குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ”வாடகைத்தாய் முறையில் பிறக்கப்போகும் குழந்தை, அதன் தந்தையின் உயிரணுவையோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும்.

அந்த நிபந்தனையுடன் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். அதாவது, கணவன் – மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது.

யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருந்தால் தான் அந்த முறையை பயன்படுத்த முடியும்.

கணவன் – மனைவி இருவரில் யாரவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருப்பதாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும்.

அதன் பிறகு தான் உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தானமாக பெற முடியும். ஒரு பெண் கணவரை இழந்தவராகவோ அல்லது விவாகரத்து ஆனவராகவோ இருந்தால், அவரது சொந்த கருமுட்டையையும், தானமாக பெறப்பட்ட உயிரணுவையும் பயன்படுத்தித்தான் வாடகைத்தாய் முறைக்கு செல்ல முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகளை இந்திய அரசு நேற்று அறிவிப்பாணையாக வெளியிட்டது.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!