விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தை பல போட்டிகளுக்கு மத்தியில் பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் என ஒரு நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன.
படத்தின் பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டதால், தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு பின் இந்த படம் வருவதால், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், இறுதியில் நெட்பிளிக்ஸ் விஜய் படத்தை கைப்பற்றியுள்ளது.