ஆசையாக பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியிடம் விசாரணை நடத்தியதுபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர், கடலில் குதித்து தற்கொலை செய்யும் நோக்குடன் ஆர்.கே கடற்கரைக்கு முயன்றுள்ளார்.

இதனை கவனித்த அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் சிலர் சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்திய அந்த நபர்கள், அருகில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த கும்பல் மேலும் 7 பேரை வரவழைத்து, 22ஆம் திகதி வரை விடுதியில் வைத்து சிறுமியை வன்புணர்வு செய்துள்ளது.

இதனையடுத்து அந்த கும்பலில் ஒரு நபர், ஒடிசா மாநிலத்திற்கு சிறுமியை மறுநாள் அழைத்து சென்று பொலிஸ் நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளார்.

சிறுமி நிற்பதை கவனித்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவர் கூற அதிர்ந்துள்ளனர்.

பின்னர் அவர் அளித்த தகவலின்படி விசாகப்பட்டின பொலிஸாரின் உதவியுடன் பெற்றோரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

அங்கு தனக்கு நடந்த அவலத்தையும், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணத்தை சிறுமி கூறியது பெற்றோருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது.

அதாவது, கடந்த 17ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாட ஆண் நண்பர் இம்ரானுடன் சிறுமி சென்றுள்ளார். கடற்கரை விடுதியில் இம்ரான் தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்தே குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின்னர் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தனிப்படை அமைத்த பொலிஸார் ஜார்க்கண்ட மற்றும் விசாகப்பட்டினத்தில் அதிரடி சோதனை நடத்தி 11 பேரை கைது செய்தனர்.

அத்துடன் தலைமறைவான 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!