தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 19 பேர் பரிதாப பலி..

நிகரகுவா நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு நிகரகுவா (Nicaragua).

இந்நாட்டின் Matagalpa பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதில் குழந்தைகள், பெண்கள் என 70க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர்.

பேருந்து ராஞ்சோ கிரான்டேவில் உள்ள மன்செரா ஆற்றின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகமாக தடுப்புச்சுவர் மீது மோதியது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து பாரிய விபத்தில் சிக்கியது.

பள்ளத்தில் கவிழ்ந்த இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் 10 பேர் குழந்தைகள் என்றும், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மீட்பு படையினரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால்இ அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!