துக்க நிகழ்விற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சர்மிளா (22). இவர் சென்னையில் ஒரு கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டிற்கு, துக்க நிகழ்வுக்காக சர்மிளா சென்றுள்ளார்.
தனது தாய் மாமா பிரபு வீட்டில் சர்மிளா தங்கி இருந்த நிலையில், தச்சங்குறிச்சி அருகே உள்ள நாட்டாணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர்.
இதனால், தன்னையும் அழைத்துச் செல்லுமாறு பிரபுவிடம் சர்மிளா கைப்பேசி மூலம் கூறியுள்ளார்.
ஆனால், பிரபு தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்புசாமிடம் சர்மிளாவை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
 எனவே, சர்மிளா கருப்புசாமியுடன் தனியாக சென்றுள்ளார். அப்போது கருப்பசாமி அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

தாயின் பிறந்த நாள் எனக் கூறி அழைத்த மாணவன்..நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - Namthesam T November 29, 2023 - 6:55 pm
[…] கடற்கரைக்கு சென்றபோது மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை […]
Add Comment