ரயில் மோதி சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் நளீம் முஹம்மது சப்ரிட் (14). 9ம் வகுப்பு படித்து வந்த இவர், தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக ரயில் வரும் நேரத்தில் பாலத்தின் அருகில் இவர் சென்றதால், ரயில் மோதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையும் தொடங்கியுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!