கலைஞர் உயிரோடு இருந்திருப்பார்! பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி

விஜயகாந்த் சில விஷயங்கள் செய்திருந்தால், கலைஞர் உயிரோடு இருந்திருப்பார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கடந்த டிசம்பர் 28ம் தேதி, தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகம் மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அதில், “2016 சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்துக்கு கலைஞர் பெருந்தன்மையோடு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் கூட்டுசேர மறுத்துவிட்டார். அன்று மட்டும் கூட்டணியில் இருந்திருந்தால் கலைஞர் முதல்வராக இருந்திருப்பார். அந்த தெம்பிலேயே அவர் வாழ்ந்திருப்பார். அம்மையார் ஜெயலலிதாவும் உடல்நலனில் அக்கறை காட்டி இருப்பார்” என்றார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!