அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் ரணில் தேர்தல்கள் குறித்து ஆலோசித்ததாகவும் திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!