ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வெட் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய 15 சதவீதமாகக் காணப்பட்ட வெட் வரி 3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. வெட் வரி தொடர்பில் போலியான தகவல்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பரப்பப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் என்பவை எமக்கு கடன் சலுகைகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வற் வரியை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முடிந்தளவு மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்பதையும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!