மிஷன் படத்தின் வெற்றி தனது வலிகள் அனைத்தையும் மறக்க செய்ததாக நடிகர் அருண்விஜய் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் கதாநாயகன் அருண்விஜய் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
படப்பிடிப்பில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் கையில் கட்டுடனே அவர் பொதுவெளியில் தோன்றுகிறார்.
மேலும் காயம் ஏற்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அருண்விஜய் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர், ”மிஷன் சாப்டர்-1 படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்பு, கடந்த 2 மாதங்களாக நான் அனுபவித்த எல்லா வலிகளையும் மறக்க செய்தது.
உங்களின் அன்பு தான் காயங்களில் இருந்து மீண்டு வர காரணமாக உள்ளது’ என உருக்கத்துடன் தனது பதிவில் கூறியுள்ளார்.
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய படங்களுடன் போட்டியிட்டு ‘மிஷன் சாப்டர்-1’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.