நள்ளிரவில் நடக்கும் பயங்கரம்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் நள்ளிரவு நேரங்களில் திருட்டு சம்பவம் நடந்து வருவதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

சமீபநாட்களாக நள்ளிரவு நேரங்களில் வீடுகளில் உள்ள வாகனங்களின் உதிரி பாகங்களை ஒரு கும்பல் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது.

இது தொடர்பாக வந்த தொடர் புகாரை அடுத்து, பொலிசார் அந்த திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த கும்பல், இரவு நேரங்களில் வீடுகளில் இருக்கும் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இதனால், மக்கள் இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி ஏதேனும் சந்தேக நபர்கள் உங்கள் பகுதிகளில் சுற்றினால், உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தை தொடர்புகொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!