அமெரிக்காவில் பயங்கர விபத்து! 6 இந்தியர்கள் பலி ..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மினி வேன் மீது லொறி மோதிய பயங்கர விபத்தில் ஆறு இந்தியர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இச்சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் கவுண்டி என்ற பகுதியில், செவ்வாய்க்கிழமை மாலை இந்த கோர விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் லொறி ஒன்று நுழைந்ததில் மினி வேன் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

மினி வேனில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் லோகேஷ் பொட்டாபத்துல்லா (43) என்ற ஒருவர் மட்டும் அதிகபட்ச காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொட்டாபத்துல்லாவின் மனைவி நவீனா வயது 36 மற்றும் அவரது குழந்தைகள் நிஷித்தா(9) கிருத்திக் (10) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், நவீனாவின் பெற்றோர் சீதா மகாலட்சுமி (60), நாகேஸ்வர ராவ்(64) மற்றும் ஓட்டுநர் ருஷில் பர்ரி (28) ஆகிய ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதில் , விபத்துக்குள்ளான லொறியில் பயணித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் அதிகபட்ச காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!