கொழும்பில் பதற்றம்! தாக்குதல்

கொழும்புவில் உள்ள புதுக்கடை பகுதியில் பெண் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது அப்பகுதி மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கடை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த 4 பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதிக்கு சிவில் உடையில் சென்றுள்ளனர். அப்போது குறித்த பெண்ணை கைது செய்து பொலிசார் அழைத்து சென்றபோது, 2 இளைஞர்கள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு பின் 40 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் லோகட்லேன் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்கியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மருதானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!