தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் “Manjummel Boys” திரைப்பட விமர்சனம்

சமீபத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் எனும் மலையாளத் திரைப்படம் மலையாளத்தைத் தாண்டி தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டில் வெளியான Jan.E.Man படத்தை இயக்கிய சிதம்பரம் தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தையும் இயக்கியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகருமான சௌபின் ஷாஹிர் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

அதேபோல் தமிழ் நடிகர்களான ஜார்ஜ் மரியான், ராமசந்திரன் துரைராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதை சுருக்கம்

கொச்சினின் மஞ்சும்மேல் எனும் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

அங்கு தவறவிட்ட இடம் என ‘குணா குகை’-யை கிளம்பும் முன்பு திரும்பி வந்து பார்வையிடுகின்றனர்.

அப்போது பெரிய சிக்கலில் மாட்டி உயிருக்கு போராடும் நண்பரை, நம்பிக்கை இழக்காமல் நண்பர்கள் ஒன்றிணைந்து காப்பாற்றுவதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் சிறப்பம்சங்கள்

கலாட்டாவான நண்பர்களாக அறிமுகமாகும் மஞ்சும்மேல் பாய்ஸ் தங்களுக்கென கயிறு இழுக்கும் போட்டியில் கைதேர்ந்தவர்களாக காட்டப்படுகின்றனர்.

இது இரண்டாம் பாதியின் முக்கிய கட்டத்தில் எப்படி உதவுகிறது என்பதை இயக்குநர் சிறப்பாக கையாண்டுள்ளார்.

படத்தில் இருமுறை ஒலிக்கும் ”கண்மணி அன்போடு..” பாடல் கிளைமேக்சில் பொருத்தப்பட்ட இடம் பார்வையாளர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கண்ணை கவரும் ஒளிப்பதிவு, அதிரவைக்கும் ஒலிக்கலவை, நேர்த்தியான திரைக்கதை, எதார்த்தமான நடிப்பு என அனைத்து அம்சங்களிலும் மஞ்சும்மேல் பாய்ஸ் உயர்ந்து நிற்கிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் நட்பின் ஆழத்தையும், நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு எடுக்கும் துணிச்சலான முடிவையும் எடுக்கலாம் என்பதையும் பறைசாற்றுகிறது இந்த மஞ்சும்மேல் பாய்ஸ்.

Rating for Manjummel Boys: 3.75/5

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!