ஆச்சரியம்! 6 மாதங்களில் 2 குழந்தைகள் பெற்ற பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவர் 6 மாதங்களில் 2 குழந்தைகள் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜெசிகா. சிகையலங்கார நிபுணரான இவர் 6 மாதங்களில் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

இதில், முதல் குழந்தைக்கு ஒரு வயது, மற்றொரு குழந்தை பிறந்து 6 மாதங்களே ஆகியுள்ளது.

இது ஆச்சரியமாக இருந்தாலும், இதுதான் உண்மை. இதை மருத்துவத்தில் சூப்பர் பேட்டேஷன்(Superfetation) என்று கூறுகின்றனர்.

அதாவது, ஒரு முறை கருவுற்ற பெண், மீண்டும் கர்ப்பமாகலாம். அப்படிதான், ஜெசிகா விஷயத்தில் நடந்துள்ளது. ஒரு கருப்பையில் இரு கருக்கள் இருக்குமாம்.

அது வெவ்வேறு நிலைகளில் வளர தொடங்கும். இது அறிவியல் ரீதியாக இரட்டையர்கள் என்றுதான் கூறுவர். இதற்கு ஒரு வாரம் அல்லது மாதம் மட்டுமே ஆகும்.

ஆனால், ஜெசிகா விஷயத்தில் 6 மாத இடைவெளி இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம். இதுபோன்று நடப்பது மிகவும் அரிது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது வரை உலகம் முழுவதும் இதுவரை 10 பேருக்கு இதுபோல் நடந்துள்ளது. அந்த வரிசையில் 11வது நபராக ஜெசிகா இணைந்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!