PC தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோனின் போட்டோ!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் PC எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில், பிரபல நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் Police Constable பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

தேர்வினை எழுத வரும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டு (Admit Card) கொண்டு வர வேண்டும்.

இந்த சீட்டு இருந்தால் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கன்னோஜ் திர்வா பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்திற்காக வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டில், நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், குறித்த அனுமதிச் சீட்டைக் கொண்டு யாரும் தேர்வு மையத்தில் யாரும் தேர்வு எழுத வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பொலிஸார் கூறுகையில், நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து யாரோ சிலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!