யாழில் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெறும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொண்டுள்ளது.