2 வயது குழந்தையை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்!

சென்னை மாநகராட்சி பூங்காவில் சிறுமியை நாய் கடித்த விவகாரம் அடங்குவதற்குள், அம்பத்தூரில் 2 வயது குழந்தையின் கன்னத்தை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, சென்னை பாடி வட்ட வடிவ நகரில் வசித்து வரும் தங்கபாண்டியன்-பிரதீபா தம்பதியின் 2 வயது குழந்தை யாஸ்மிகா, வீட்டின் தரைதளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 தெரு நாய்களில், ஒன்று குழந்தை யாஸ்மிகாவை துரத்தி துரத்தி கடித்தது.

இதில், குழந்தையின் கன்னத்தில் உள்ள சதை வெளியே தொங்கிய நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, யாஸ்மிகாவுக்கு தோல் மற்றும் அறுவை சிகிச்சை செய்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். சிகிச்சை முடிவடைந்த நிலையில், குழந்தை யாஸ்மிகா தற்போது வீடு திரும்பியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!