மிரட்டலாக சதம் விளாசிய இலங்கை வீரர்

இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.

கொழும்பில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை நேற்று ஆடியது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்து களமிறங்கியது.

முதல் ஓவரிலேயே இலங்கை அணி அவிஷ்கா பெர்னாண்டோ (0) விக்கெட்டை இழந்தது.

அதன் பின்னர் களமிறங்கிய சதீர சமரவிக்ரமா அதிரடியில் மிரட்டினார். குசால் மற்றும் சமரவிக்ரமா இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்த நிலையில், சதீர சமரவிக்ரமா 31 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து கேப்டன் குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்களில் இருந்தபோது ரன் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து முசரபானி, கரவா மற்றும் பராஸ் அக்ரமின் மும்முனை தாக்குதலில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் மறுபுறம் சரித் அசலங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது சதம் அடித்தார்.

அவர் 95 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 279 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்பே அணியின் தரப்பில் கரவா, முஷரபானி மற்றும் பராஸ் அக்ரம் தலா 2 விக்கெட்டுகளும், சிக்கந்தர் ரஸா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்பே, மதுஷன்காவின் அற்புதமான பந்துவீச்சில் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணி 2 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை நிற்காததால் போட்டி ரத்தானது.

தான் வீசிய இரண்டு ஓவர்களையும் மதுஷன்கா மெய்டனாக வீசியதுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!