டெல்லியில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வித்தியாசமான முறையில் அவுட் ஆகி மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
அவர் பேட்டிங் செய்ய பெவலியனில் இருந்து ஆடுகளத்திற்கு தாமதமாக வந்தார்.
இதனால் நடுவர் அவருக்கு Timed out கொடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வாறு அவுட் ஆகும் முதல் வீரர் என்ற மோசமான சாதனையை மேத்யூஸ் படைத்தார்.
இலங்கை அணி நிர்ணயித்த 280 ரன்கள் வெற்றி இலக்கினை நோக்கி வங்கதேசம் ஆடி வருகிறது.