இலங்கை தமிழரும், நடிகருமான போண்டா மணி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார்.

தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60).

இலங்கை தமிழரான இவர் 1991ஆம் ஆண்டில் இருந்து நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக உடல்நல பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார்.

குறிப்பாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன.

இதனால் திரைத்துறையில் பலரிடமும் போண்டா மணி உதவி கோரினார்.

சிலர் அவருக்கு உதவி செய்த நிலையில் வீட்டில் இருந்தபடி உடலை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வழுக்கி விழுந்ததால் உடனடியாக குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போண்டா மணியின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறுதிச்சடங்கு சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ திரையுலகினரும் ரசிகர்களும் போண்டா மணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!