ஆப்கானுக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை வீரர்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமல் சதம் அடித்தனர்.

ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கான் அணி 198 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்கள் எடுத்தார். விஷ்வா பெர்ணான்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்துள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ் 141 ரன்களும், தினேஷ் சண்டிமல் 107 ரன்களும் விளாசினர். திமுத் கருணரத்னே அதிரடியாக 72 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

சதீரா சமரவிக்ரமா 22 (21) ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை அணி தற்போது வரை 212 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் ஜட்ரான் மற்றும் கியாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!